துணை முதல்வர் அதிரடி உத்தரவு

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு இருப்பது தெரிந்ததே. கொரோனா வைரஸ் பரபரப்பு அடங்கிய பின்னர் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அதற்கு முன்னர் பள்ளிகள் திறக்க வாய்ப்பே இல்லை என்றும் மத்திய மாநில அரசுகள் தெரிவித்து உள்ளன

இந்த நிலையில் டெல்லியில் ஜூலை 31 வரை அனைத்து பள்ளிகளையும் மூட துணை முதல்வர் மணிஷ் சிசோடியா என்பவர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக டெல்லியில் ஜூலை 31 வரை பள்ளிகளை மூட உத்தரவிட்டு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் டெல்லியில் நேற்று ஒரே நாளில் மேலும் 3,460 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் இதனையடுத்து கொரோனா பாதிப்புமொத்த எண்ணிக்கை 77,240 ஆக அதிகரிப்பு என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் டெல்லியில் கொரோனாவால் ஒரே நாளில் 63 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply