ஜூன் 3ல் பள்ளிகள் திறப்பு! தமிழக அரசு அறிவிப்பு

தமிழகம் முழுவதும் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் பள்ளிகள் திறக்கப்படும் ஜூன் 3ஆம் தேதி அன்றே அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் புத்தகம்,நோட்டு உள்ளிட்ட விலையில்ல பொருட்கள் வழங்கவேண்டும் என்றும் அனைத்து மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

கடுமையான வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பது ஒரு வாரம் காலதாமதம் ஆகலாம் என்று கருத்து நிலவி வந்த நிலையில் ஏற்கனவே திட்டமிட்டபடி ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply