ஜியோமி ரெட்மியின் அடுத்த அவதாரம்: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

செல்போன் உற்பத்தியில் உலகம் முழுவதும் புதிய புரட்சியை ஏற்படுத்தி வரும் ஜியோமி ரெட்மி தற்போது புதிய அவதாரம் எடுக்கவுள்ளது.

விரைவில் ஜியோமி சார்பில் ரெட்மி புதிய மாடல் லேப்டாப் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் ஆக உள்ளதாகவும், நவீன அம்சங்களுடன் மற்ற நிறுவனங்கள் தர முடியாத விலையில் இந்த லேப்டாப் இருக்கும் என்றும் கூறப்படுகிறது

ரெட்மிபுக் என்னும் பிராண்ட் பெயருக்காக ஜியோமி நிறுவனம் காப்புரிமை கோரி மத்திய அரசிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் ஜியோமி சார்பில் வெளியாகும் லேப்டாப் இந்திய சந்தையைக் கைப்பற்றும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே Mi மற்றும் ரெட்மிபுக் ஆகிய இரண்டு பெயர்களில் ஜியோமி நிறுவனம் சீனாவில் லேப்டாப் விற்பனையில் கலக்கி வரும் நிலையில் தற்போது ஜியோமியின் லேப்டாப் இந்தியாவிலும் அறிமுகமாக உள்ளது. ஜியோமி ரெட்மியின் லேப்டாம் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவின் சந்தைகளில் விற்பனையை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply