ஜிம்பாவேயில் ஆட்சியை கைப்பற்றியதா ராணுவம்?
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வே நாட்டில் இன்று அதிகாலை தலைநகர் ஹரரேவை ராணுவ பீரங்கிகள் சுற்றி வளைத்தாகவும், அங்கு அதிகளவிலான ராணுவ வீரர்கள் தலைநகரை சுற்றி குவிக்கப்பட்டதாகவும் தகவல்கல் வெளிவந்துள்ளது. அந்நாட்டு அரசு ஊடக தலைமையகத்தையும் ராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாகவும் தெரிகிறது. மேலும் ஜிம்பாப்வேயில் அரசியல் நிலையற்ற தன்மை நிலவுவதால், அமெரிக்கர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியது.
ஆனால் ராணுவ புரட்சி என்ற தகவலை அந்நாட்டு ராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில் “ அரசை ராணுவம் கைப்பற்றும் முயற்சி இது இல்லை. அதிபர் ராபர்ட் முகாபேவை சுற்றியுள்ள குற்றவாளிகளை குறிவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நாங்கள் விரும்புகிறோம். அதிபர் அருகாமையில் இருந்த குற்றம் செய்த நபர்களை மட்டுமே நாங்கள் குறிவைத்தோம். எங்கள் பணி முடிந்தவுடன் வெகு விரைவில் இயல்பு நிலை திரும்பும்” என்று தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.