shadow

ஜிப்மர் வளாகத்தில் எம்.பி.பி.எஸ். வகுப்புகள் தொடங்கின

jipmerகாரைக்காலில் 49 எம்.பி.பி.எஸ். மாணவர்களுடன் ஜிப்மர் வளாகத்தில் வகுப்புகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.
காரைக்கால் கடற்கரை சாலையில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான இடத்தை ஜிப்மர் வளாகம் செயல்படுவதற்கு வழங்கப்பட்டதையொட்டி, இந்த இடம் வகுப்பறைகள், நிர்வாக வளாகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டது. வலத்தெரு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் சீரமைக்கப்பட்டு, மாணவர்கள் தங்குவதற்கு தரப்பட்டன. இதில் காரைக்கால் வளாகத்தில் பயிலக்கூடிய மாணவர்கள் கடந்த 2 நாள்களுக்கு முன்பு வந்து தங்கினர்.

இயக்குநர் கூறியபடி, நவ.15-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கடற்கரை சாலையில் உள்ள வளாகத்தில் வகுப்புகள் தொடங்கப்பட்டதாக ஜிப்மர் வளாக வட்டாரங்கள் தெரிவித்தன. புதுச்சேரியில் நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் காரைக்கால் ஜிப்மர் வளாகத் திறப்பு விழா நடத்தப்படவில்லை.

Leave a Reply