shadow

மாணவிகளிடம் சில்மிஷம் விளையாட்டுகளில் ஈடுபட்டது ஜாலிக்காக செய்தேன் என்றும் ஆனால் அது இந்த அளவுக்கு விபரீதமாகும் என்று எனக்கு தெரியாது என்றும் போலீஸ் விசாரணையின்போது பத்மா சேஷாத்திரி ஆசிரியர் ராஜகோபாலன் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது

மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ராஜகோபாலனை நேற்று இரவு போலீசார் விடிய விடிய விசாரித்தனர்

அப்போது மாணவிகளுடன் வகுப்பறையிலும் ஆன்லைனிலும் ஜாலிக்காக தான் சில்மிஷம் செய்ததாகவும் வேறு எந்த நோக்கமும் இல்லை என்றும் இந்த அளவுக்கு விபரீதமாகும் என்று தனக்கு தெரியாது என்றும் கூறியுள்ளதாக தெரிகிறது