ஜாமீன் ரத்து: தலைமறைவாக இருந்த சயன், மனோஜ் கைது!
கொடநாடு கொலை வழக்கில் சர்ச்சைக்குரிய வகையில் வீடியோவில் பேசிய சயன், மனோஜ் ஆகியோர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமினை நீலகிரி நீதிமன்றம் ரத்து செய்தது
இதனையடுத்து ஜாமின் ரத்து செய்யப்பட்ட பின்னரும் போலீசில் சயன், மனோஜ் ஆகியோர் சரணடையவில்லை. இருவரும் தலைமறைவாக இருந்ததாக செய்திகள் வெளிவந்த நிலையில் கேரள மாநிலம் திருச்சூரில் மறைந்திருந்த சயன், மனோஜை போலீஸ் கைது செய்தனர்.
இந்த நிலையில் தங்களை கைது செய்ததற்கு எதிராக பிற்பகலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சயன், ம்னோஜ் ஆகிய இருவரும் முறையிடப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.