ஜல்லிக்கட்டு போட்டி தடுத்து நிறுத்தம்: திருத்தணி அருகே பரபரப்பு
மதுரை அருகே உள்ள அவனியாபுரம், பாலமேடு மற்றும் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் ஜல்லிகட்டு மிக சிறப்பாக நடந்தது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை ஏராளமான மக்கள் கண்டு களித்தனர்.
இந்த நிலையில் திருத்தணி அருகே விஜிஆர் கண்டிகையில் நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ஜல்லிக்கட்டை அனுமதியின்றி சிலர் நடத்த முயன்றதாகவும், அதனால் ஜல்லிக்கட்டை போலீசார் தடுத்து நிறுத்தியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
உரிய அனுமதி பெற்று மாடுபிடி வீரர்களுக்கு உரிய மருத்துவ சோதனை செய்த பின்னரே ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்றும் அனுமதி இல்லாமல் யாரும் ஜல்லிகட்டை நடத்த முயற்சிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.