ஜனவரி 6ஆம் தேதியும் பள்ளிகள் விடுமுறை: கலெக்டரின் அறிவிப்பால் பரபரப்பு

அரையாண்டு தேர்வு, கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை முடிந்து ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை காரணமாக ஜனவரி 4 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது

ஆனால் வாக்கு எண்ணிக்கை இன்னும் முடிவடையாத காரணத்தால் ஜனவரி 6ஆம் தேதி திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்படும் என சற்று முன் பள்ளி கல்வித்துறை அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஜனவரி 6ம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு அவர்கள் தெரிவித்துள்ளார். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் மட்டும் ஜனவரி 6ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் ஆனால் அதே நேரத்தில் அன்றைய தேதியில் தேர்வு நடைபெறும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை பொருந்தாது என்றும் கலெக்டர் சிவராசு அவர்கள் அறிவித்துள்ளார்

எனவே ஜனவரி 6ம் தேதியும் திருச்சி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்பதால் அம்மாவட்டத்தில் மட்டும் ஜனவரி 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply