ஜனநாயக பச்சைப்படுகொலை: இலங்கை நாடாளுமன்ற கலைப்பு குறித்து ஸ்டாலின்
இலங்கையின் பாராளுமன்றத்தை கலைக்கும் உத்தரவை நேற்று நள்ளிரவு ஜனாதிபதி சிறிசேனா பிறப்பித்த நிலையில் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தை கலைக்கும் முடிவை எடுத்த ஜனாதிபதிக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்தியாவிலும் குறிப்பாக தமிழக அரசியல்வாதிகளும் இலங்கை ஜனாதிபதியின் இந்த நடவடிக்கையை கண்டித்து வருகின்ரனர்.
இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து கருத்து தெரிவித்தபோது, ‘இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேன கலைத்திருப்பது ஜனநாயக பச்சைப்படுகொலை. ஈழத்தமிழர்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.