shadow

சோமாலிய ஓட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல்: 500 பேர் பலி

சோமாலியா நாட்டில் தீவிரவாதிகளின் கைவரிசையால் ஓட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவரை சுமார் 500 பேர் பலியாகியிருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.

கடந்த மாதம் நடந்த இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 358 பேர் பலியாகினர். பின்னர் படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருக்கும்போதே பலியானவர்களின் எண்ணிக்கையை சேர்த்தால் தற்போது அந்த எண்ணிக்கை 500ஐ தாண்டிவிட்டதாக சோமாலிய அரசு அறிவித்துள்ளது.

சோமாலியாவில் இதுவரை நடத்திய தாக்குதலில் இதுவே மிக மோசமானதாக கருதப்படுகிறது. தாக்குதலில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சோமாலியாவில் 3 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply