shadow

சோபியாவை யாரோ பின்னால் இருந்து இயக்குகின்றனர்: இல.கணேசன்

சென்னையில் இருந்து தூத்துகுடிக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் விமானத்தில் சென்றபோது ‘பாசிச பாஜக ஒழிக’ என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக மாணவி ஷோபியா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த விவகாரம் தற்போது தமிழகம் முழுவதும் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சோபியா கனடா நாட்டில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் மாணவி என்பதால் கனடாவில் இருந்தும் சோபியா கைதுக்கு கண்டனங்கள் எழுந்து வருகின்ற்ன.

இந்த நிலையில் பா.ஜ.கவுக்கு எதிராக கோஷமிட்ட பெண்ணுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள் பேசுவது, பண்பாடற்ற செயல் என அக்கட்சியின் எம்.பி. இல.கணேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். மதுரை விமானநிலையத்தில் பேசிய அவர், ஜனநாயகத்திற்கு விரோதமான செயலை அரசியல் கட்சிகள் ஆதரிக்கக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply