சோபியாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தால் அரசு வேடிக்கை பார்க்காது – கடம்பூர் ராஜு
நேற்று தமிழகம் மட்டுமின்றி இந்தியாவையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தமிழிசை-சோபியா விவகாரம் இன்றும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் டிரெண்டில் இருந்து வருகிறது. மேலும் சோபியாவுக்கு தமிழிசை உள்ளிட்டோர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சோபியாவின் தந்தை குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த நிலையில் சோபியாவிற்கு யாராவது கொலை மிரட்டல் விடுத்தால், அதனை தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் நடைபெற்ற வ.உ. சிதம்பரனார் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உள்ளது தான் என்றாலும், அதனை இடம் அறிந்து வெளிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.