shadow

சைதையில் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி : மே 7-ல் நுழைவு தேர்வு

மனிதநேய அறக்கட்டளையில் 2018-ம் ஆண்டுக்கான ஐஏஎஸ் முதல்நிலை தேர்வுக்கு தயாராவோருக்கு இலவச பயிற்சிக்கான நுழைவுத் தேர்வு வரும் மே7-ல் நடைபெற உள்ளது.

மனிதநேயம் அறக்கட்டளையால் நடத்தப்படும் சைதை துரை சாமியின் கட்டணமில்லா ஐஏஎஸ் கல்வியகத்தில் 2018-ம் ஆண்டுக் கான ஐஏஎஸ் முதல்நிலைத் தேர் வுக்கு இலவச பயிற்சி வகுப்பு கள் நடத்தப்பட உள்ளன. இப் பயிற்சிக்கு தகுதியான நபர்களை தேர்வுசெய்ய ஏப்ரல் 30-ம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நுழை வுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஏப்ரல் 30 அன்று ஆசிரியர் தகுதி தேர்வு உள்ளிட்ட தேர்வுகள் நடைபெறும் என்பதால் இந்த தேர்வுக்கான தேதி மே-7ம் தேதியாக மாற்றப்பட்டுள்ளது.

இலவச பயிற்சிக்கான மாணவர் தேர்வில் மாவட்ட வாரியாக ஒதுக் கீடு உண்டு. எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 தேர்வில் 80 சதவீத மதிப்பெண்ணுக்கு மேல் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் நுழைவுத்தேர்வு மதிப்பெண்ணை கணக்கில் கொள்ளாமலேயே இடம் வழங்கப்படும். ஆனால், அந்த மாணவர்களும் நுழைவுத்தேர்வு எழுத வேண்டியது கட்டாயமாகும்.

இலவச பயிற்சிக்கான நுழை வுத்தேர்வு எழுத விரும்புவோர் www.saidais.com என்ற இணைய தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே ஆன்லைன் பயிற்சிக்கு விண்ணப் பித்தவர்கள் நுழைவுத்தேர்வுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண் டும். விண்ணப்பிக்க கடைசி நாள் மே 5-ம் தேதி ஆகும். .

அந்த அனுமதிச்சீட்டில் பாஸ் போர்ட் அளவுள்ள புகைப்படத்தை ஒட்டி, அதில் அரசு அதிகாரியிடம் சான்றொப்பம் பெற வேண்டும். அவ்வாறு சான்றொப்பம் பெற முடியாதவர்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை அனுமதிச்சீட்டுடன் கொண்டுவர வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு 044-24358373 என்ற தொலைபேசி எண்ணிலோ, 98401-06162 என்ற செல்போன் எண்ணிலோ அல்லது www.saidais.com என்ற இணையதள முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply