சைக்கிளில் வந்த சபாநாயகர்! ஏன் தெரியுமா?
(image thanks to sun news)
பெட்ரோல்- டீசல் விலையேற்றத்தினை கண்டித்து புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம், சட்டப்பேரவை அலுவலகத்திற்கு சைக்கிளில் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை ஏறிக்கொண்டே போகிறது. இதே ரீதியில் சென்றால் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை ரூ.100ஐ தொட்டுவிடும் அபாயம் உள்ளது.
இந்த நிலையில் புதுவை சபாநாயகர் வைத்திலிங்கம் பெட்ரோல் டீசல் விலையேற்றத்தை கண்டிக்கும் வகையில் இன்று சட்டமன்றத்திற்கு சைக்கிளில் வந்தார். அவரை புதுவை முதலமைச்சர் நாராயணசாமி வரவேற்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.