செளந்தர்யா ரஜினி கூறிய அறிவுரைக்கு எதிர்ப்பு தெரிவித்த நெட்டிசன்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் கடந்த சில நாட்களாக தனது மகன் வேத் குறித்த புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து நிலையில் இன்று மகன் வேத் நீச்சல் பழகி வருவது குறித்து ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
குழந்தைகளுக்கு இளம் வயதில் நீச்சல் பழகி கொடுக்க வேண்டும் என்றும், நீச்சல் என்பது ஒவ்வொருவரும் பழகிக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம் என்றும், அதே நேரத்தில் குழந்தைகளை விட்டு விலகாது அருகில் இருந்தே அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்’ என்று பெற்றோர்களுக்கு அவர் அறிவுரை தெரிவித்தார்.
ஆனால் சென்னை மக்கள் தண்ணீர் கஷ்டத்தில் இருக்கும்போது நீச்சல் பழகுவது குறித்து பொறுப்பில்லாமல் செளந்தர்யா பேசி வருவதாக நெட்டிசன்கள் அவரது டுவிட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.