shadow

செளந்தர்யாவுடன் லதா ரஜினி திருப்பதி சென்றது ஏன்? புதிய தகவல்

ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா தன் தாய் லதா ரஜினிகாந்த்துடன் நேற்று முன்தினம் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சுவாமி வழிபாடு செய்தார். ரஜினியின் ‘பேட்ட’ திரைப்படம் வெற்றி பெறவே இந்த தரிசனம் என்று கூறப்பட்டது.

ஆனால் ரஜினியின் மகள் செளந்தர்யாவுக்கு இரண்டாவது திருமணம் நடைபெறவுள்ள நிலையில் அவரது திருமண அழைப்பிதழை ஏழுமலையானின் திருப்பாதங்களில் வைத்துப் பூஜை செய்யவே இந்த தரிசன பயணம் என்று கூறப்படுகிறது.

செளந்தர்யாவின் இரண்டாவது திருமணம் வரும் பிப்ரவரி மாதம் எளிமையாக நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது

Leave a Reply