கோவையில் பரபரப்பு

கோவையில் செல்போன் கடைகள் 5 நாட்கள் மூடப்படும் என்ற அறிவிப்பால் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கோவையில் கூட்டம் அதிகமுள்ள இடங்களில் குறிப்பாக கோவை காந்திபுரம் பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது

இதற்கு அங்கு இருக்கும் செல்போன் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் கூட்டமே காரணம் என்று கூறப்பட்டது

இந்த நிலையில் இதுகுறித்து செல்போன் கடை வியாபாரிகளிடம் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் நாளை முதல் 5 நாட்களுக்கு கோவை காந்திபுரத்தில் உள்ள அனைத்து செல்போன் கடைகளை அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது

Leave a Reply