செல்பி எடுத்த விஜய், தடியடி நடத்திய போலீஸ்: நெய்வேலியில் பரபரப்பு

தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தற்போது நெய்வேலியில் நடைபெற்ற வருவது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பை நிறுத்த ஒரு சில அரசியல் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருவதை அடுத்து படத்தின் பாதுகாப்பிற்காக நெய்வேலியில் விஜய் ரசிகர்கள் குவிந்து உள்ளனர்

இந்த நிலையில் இன்றைய படப்பிடிப்பை முடித்துவிட்டு விஜய் வெளியே வந்தபோது அவரை காண நூற்றுக்கணக்கான விஜய் ரசிகர்கள் திரண்டனர். இதனை அடுத்து வேன் மீது ஏறிநின்று ரசிகர்களுடன் விஜய் செல்ஃபி எடுத்தார். அப்போது விஜய்யின் செல்பி புகைப்படத்தில் தங்கள் முகம் தெரிய வேண்டும் என்பதற்காக விஜய் ரசிகர்கள் தள்ளுமுள்ளு செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது பதட்டம் ஏற்பட்டது

இதனை அடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி விஜய் ரசிகர்கள் கலைத்தனர். விஜய் முன்னிலையிலேயே அவரது ரசிகர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply