சென்னை வறட்சி: முக ஸ்டாலினுக்க்கு பதிலடி கொடுத்த கிரண்பேடி
புதுவை கவர்னர் கிரண்பேடி சென்னையின் வறட்சி குறித்து தனது டுவிட்டரில் பதிவு செய்த ஒரு கருத்துக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். தமிழகம் மற்றும் தமிழக மக்கள் குறித்து அவர் பதிவு செய்த சர்ச்சைக்குரிய கருத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் தமிழக மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் திமுக தலைவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தனது கருத்துக்கு விளக்கம் அளித்த கிரண்பேடி, ‘சென்னை வறண்டது தொடர்பாக நான் கூறியது எனது கருத்தல்ல, மக்களின் கருத்தே; மக்களின் கருத்தையே நானும் பதிவிட்டிருந்தேன் என பதிலடி கொடுத்துள்ளார்
Leave a Reply
You must be logged in to post a comment.