சென்னை மெரீனாவில் ஸ்டாலின் ஏற்படுத்திய பரபரப்பு
சென்னை மெரீனாவில் நேற்று கருணாநிதியின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த மு.க.ஸ்டாலின், நினைவிடத்தில் கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் தொண்டர்களிடம் கைகுலுக்கி அவர்களை மகிழ்ச்சிப்படுத்தினார்.
டி.ஆர்.பாலு உள்பட முக்கிய பிரமுகர்களுடன் நேற்று சென்னை மெரீனாவில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்றார். ஸ்டாலின் வருகை அறிந்ததும் மெரீனாவில் கூடியிருந்த பொதுமக்களும், திமுக தொண்டர்களும் அவரை பார்க்க ஆவலுடன் வந்தனர்.
இந்த நிலையில் அஞ்சலி செலுத்தி முடித்தவுடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் கைகுலுக்கிய மு.க.ஸ்டாலின் அனைவருக்கும் தனது வணக்கத்தையும் தெரிவித்தார். இதனால் மெரீனாவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
Leave a Reply
You must be logged in to post a comment.