சென்னை மெட்ரோ ரயிலில் 50% கட்டணச் சலுகை: இன்ப அதிர்ச்சியில் பயணிகள்
சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படும் மெட்ரோ ரயிலில் திங்கள் முதல் வெள்ளி வரை நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் வரை பயணிகள் பயணம் செய்தபோதிலும் ஞாயிறு அன்று மிகவும் குறைவான பயணிகளே பயணம் செய்கின்றனர். இதனையடுத்து ஞாயிறு அன்று பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அதிரடி முடிவை எடுக்க திட்டமிட்டுள்ளது
இதன்படி ஞாயிறு அன்று கட்டண சலுகையை அளிக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனையடுத்து இனிமேல் ஞாயிறு அன்று ரயில் கட்டணத்தில் 50% சலுகை வழங்க ஆலோசித்து வருவதாகவும் இந்த சலுகை ஞாயிறு மட்டுமின்றி பொது விடுமுறை நாட்களிலும் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.