சென்னை மக்களே உஷார்: ஐந்து நாள் கனமழை
கடந்த ஆண்டு வர்தா புயல், கடந்த 2015ஆம் ஆண்டு வெள்ளம் ஆகியவைகளை சந்தித்த சென்னை மக்கள் இந்த ஆண்டும் கனமழையை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது
ஏற்கனவே வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் நல்ல மழை பெய்து வரும் நிலையில் வரும் நவம்பர் 3ஆம் தேதி வரை அதாவது இன்னும் ஐந்து நாட்களுக்கு சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே மழை குறித்த பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கும் இந்த ஐந்து நாட்களில் அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே வெளியே செல்ல பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியோர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.