சென்னை மக்களுக்கு இன்று முதல் கேன் குடிநீர் கிடைக்காதா? திடுக்கிடும் தகவல்

சென்னை மக்கள் பெரும்பாலானோர் தற்போது கேன்வாட்டரையே நம்பியிருக்கும் நிலையில் இன்று மாலை முதல் கேன் குடிநீர் குடிப்பது கடினம் என கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கேன் குடிநீர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்தம் இன்று மாலை 6 மணி முதல் தொடங்கும் என்று கேன் குடிநீர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது

அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சுவதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போராட்டம் எத்தனை நாள் நீடிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply