சென்னை தேனாம்பேட்டையில் வெடிகுண்டை வீசியது யார்? திடுக்கிடும் தகவல்

சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மர்ம நபர்கள் வீசிய இந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் அருகிலிருந்த கார் ஷோரூமின் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்துள்ளதாகவும், அங்கே நின்று கொண்டிருந்த கார்களும் சேதம் அடைந்ததாகவும் தெரிகிறது

இந்த வெடிகுண்டு சம்பவம் குறித்து தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தேனாம்பேட்டை உதவி ஆணையர் கோவிந்தராஜ் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை செய்து வருகிறார்.

சிசிடிவி வீடியோவில் வெடிகுண்டை வீசியது யார் என்பது தெரிந்துவிட்டதாகவும், அந்த நபரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

Leave a Reply