சென்னை தி.நகர் டியூசன் செண்டரில் படுக்கையறை, ஆபாச படங்கள்: அதிர்ச்சி தகவல்
சென்னை தி நகரில் உள்ள டியூஷன் சென்டர் ஒன்றில் படுக்கை அறை ஒன்றை அமைத்து அங்கு டியூசன் படிக்க வரும் மாணவ மாணவியரை படுக்கை அறைக்கு அழைத்து சென்று ஆபாசமாக படம் எடுத்ததாக திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது
சென்னை தி நகரில் ஒரு தனியார் டியூசன் செண்டரில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர்கள் வந்து டியூஷன் படித்து வருகின்றனர். இவர்களில் அழகான மற்றும் பணக்கார மாணவ மாணவிகள் தேர்வு செய்து அவர்களை அங்கு ரகசியமாக இருக்கும் படுக்கை அறைக்கு அழைத்து சென்று மிரட்டி இருவரும் நிர்வாண நிலையில் இருக்கும் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்ததாக கூறப்படுகிறது
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் டியூசன் சென்டரில் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தபோது பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட படுக்கை அறை கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த டியூசன் சென்டரை நடத்தும் பெண் மட்டும் அவருடைய ஆண் நண்பரை விசாரித்தபோது ‘அழகான மற்றும் பணக்கார பெண்களை மிரட்டி நிர்வாண படம் எடுப்பதை ஒப்புக்கொண்டனர்
இந்த நிர்வாண படங்களை வைத்து அவர்களிடம் உல்லாசமாக இருக்கவும், பணம் பறிக்கவும் திட்டமிட்டுள்ளதாக டியூசன் செண்டர் நடத்தும் பெண்ணின் ஆண் நண்பர் கூறினார் மேலும் அவர்களுடைய செல்போனை ஆய்வு செய்தபோது அதில் பத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளின் நிர்வாண படங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்கள் படிக்க வந்த மாணவ மாணவிகளை படுக்கை அறைக்கு அழைத்துச் சென்ற சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.