பெற்றோர்கள் அதிர்ச்சி
பள்ளி கட்டணத்தில் 50 சதவீதத்தை வரும் வியாழக்கிழமைக்குள் செலுத்த சென்னை தனியார் பள்ளி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பள்ளிக்கட்டணமாக 55 ஆயிரம் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாகவும், நீச்சல் குளத்திற்கு கட்டணம், நூலக கட்டணம் என பலவகைகளில் கட்டணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
கட்டணத்தை குறைக்க கோரி பெற்றோர் 50க்கும் மேற்பட்டோர் பள்ளியில் முற்றுகையிட்டுள்ளனர். ஆனால் கட்டணங்களை குறைக்க முடியாது என பள்ளி நிர்வாகத்தின் தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
இதனால் தனியார் பள்ளி நிர்வாகம்-பெற்றோர்கள் வாக்குவாதம் நடந்ததாகவும் இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்
Leave a Reply
You must be logged in to post a comment.