shadow

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

chennai centralசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சற்றுமுன் தீவிரவாத அமைப்பு ஒன்றிடம் இருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வெடிகுண்டு மிரட்டல் தகவல் வெளிவந்தவுடன் சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கூடுதல் பாதூகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக ரயில்வே காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

இன்னும் சற்று நேரத்தில் சென்னைக்கு வரும் ஜோத்பூர் விரைவு ரயிலை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக தீவிரவாதிகள் எஸ்எம்எஸ் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனையடுத்து எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுக்க அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் செய்து வருகின்றனர்.

Leave a Reply