சென்னை சில்க்ஸ் நிறுவனத்தில் மீண்டும் தீ விபத்து: பயங்கர சேதம் என தகவல்

சென்னையில் உள்ள சென்னை சில்க்ஸ் மற்றும் குமரன் தங்க மாளிகையில் கடந்த சில வருடங்களுக்கு முன் ஏற்பட்ட தீ விபத்தில் பயங்கர சேதம் ஏற்பட்ட நிலையில் தற்போது கோவில்பட்டி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த தீ விபத்தில் ஜவுளி துணிகள் எரிந்து நாசம் அடைந்துள்ளதாகவும், இந்த தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

சேதமதிப்பு இனிமேல் தான் கணக்கிடப்படும் என சென்னை சில்க்ஸ் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply