சென்னை கோவளம் பகுதியில் குப்பை அள்ளிய பிரதமர் மோடி
சென்னை கோவளம் கடற்கரையில் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டபோது, குப்பைகளை அகற்றும் பணியில் பிரதமர் மோடி ஈடுபட்டார்
பிரதமர் மோடியின் கனவுத்திட்டங்களில் ஒன்றான ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை அவர் அடிக்கடி வலியுறுத்தி வருவது மட்டுமின்றி நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவரே தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடுவது தெரிந்ததே
அந்த வகையில் நேற்று மாமல்லபுரத்திற்கு சீன அதிபருடன் வந்த பிரதமர் கோவளம் பகுதியில் தங்கினார். அதனையடுத்து இன்று காலை அவர் கோவளம் கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்டார் அப்போது அந்த பகுதியில் அதிக குப்பைகள் இருந்ததை பார்த்தவுடன் அவரே குப்பைகளை அள்ளி தூய்மை பணியையும் மேற்கொண்டர்
இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.