சென்னை கோயம்பேடு அருகே பயங்கர தீ விபத்து!

சென்னை கோயம்பேட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அருகே காய்ந்த புல்வெளியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கின்றது

பல ஏக்கர் காய்ந்த புற்கள் மளமளவென தீப்பிடித்து எரிவதால் தீயை கட்டுப்படுத்த 4 வாகனங்களில் தீயணைப்பு துறை வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக உள்ளனர்.

தற்போது தீ கட்டுக்குள் வந்துவிட்டாலும், அந்த பகுதியில் புகைமண்டலம் மறைய இன்னும் சில மணி நேரங்கள் ஆகும் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply