shadow

சென்னை கீழ்ப்பாக்கத்தில் வீடுகளுக்குள் திடீரென புகுந்த வெள்ளம்!

சென்னையில் கடந்த சில நாட்களாக மழையின் அறிகுறியே இல்லாத நிலையில் திடீரென சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சென்னை கீழ்ப்பாக்கம் குட்டியப்பா நகர் பம்பிங் லேன் பகுதியில் உள்ள குடிநீர் பகிர்மான நிலையத்திற்கு செல்லும் குழாய் ஒன்று நிலத்தடியில் பதிக்கப்பட்டுள்ளது. இந்த குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டதால் அதில் இருந்து வெளியேறிய தண்ணீர் அந்த பகுதியில் உள்ள சாலையில் ஆறு போல் ஓடியது.

இதனால் திடீரென வீடுகளுக்குள்ளும் வெள்ளம்போல் தண்ணீர் புகுந்ததால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த தகவல் அறிந்த குடிநீர் வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து குழாய் அடைப்பை சரிசெய்தனர். இதனால் இந்த பகுதியில் சிறிது நேரம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply