shadow

சென்னை கலெக்டர் உள்பட 24 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்

நிர்வாக வசதிக்காகவும், அதிகாரிகளின் விருப்பத்திற்காகவும் அவ்வப்போது ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கமான ஒன்றே அந்த வகையில் இன்று தமிழகத்தில், 24 ஐ.ஏ எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடியாக உத்தவிட்டுள்ளது.

இதன்படி, உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவால், தொழிலாளர் நலத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பள்ளிக்கல்வித்துறையின் பாடத்திட்ட செயலாளராக பணியாற்றி வந்த உதயசந்திரன், தொல்பொருள் துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மாவட்ட ஆட்சியராக சண்முக சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த அன்புசெல்வன் கடலூர் மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியராக கதிரவனும், மதுரை மாவட்ட ஆட்சியராக நடராஜனும், சிவகங்கை மாவட்ட ஆட்சியராக ஜெயகாந்தனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக மகேஷ்வரி ரவிக்குமாரும், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக எஸ்.பிரபாகரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் ஆட்சியராக வீரராகவராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply