சென்னை அண்ணா சாலையில் ரூ.75 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல்

சென்னை அண்ணா சாலையில் வாகன சோதனையில் ரூ.75 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை அண்ணா சாலையில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்தபோது ஒரு வாகனத்தில் தனியார் நகைக் கடை ஊழியர்கள் உரிய ஆவணங்கள் இன்றி நகைகளை எடுத்து வந்ததை ஆயிரம்விளக்கு போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்த நகைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் ஆயிரம்விளக்கு போலீஸார் ஒப்படைத்தனர். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் மதுரை அய்யர்பங்களா பகுதியில் வேனில் கொண்டு செல்லப்பட்ட 47 கிலோ தங்கம் பறிமுதல். உரிய ஆவணமின்றி சேலம் நகைக்கடைக்கு கொண்டு செல்ல முயன்றதால் தேர்தல் பறக்கும்படை நடவடிக்கை

Leave a Reply