சென்னை அசோக்நகர் பள்ளிக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை: மைச்சர் செங்கோட்டையன்
இந்தியாவில் முதன்முறையாக மாணவர்களின் முகங்களோடு கூடிய வருகைப்பதிவேடு, சென்னை அசோக் நகர் அரசுப்பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த வசதியை சற்றுமுன்னர் அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.
முகங்களோடு கூடிய வருகைப்பதிவேடு தொடங்கி வைத்த பின்னர் அரசு பள்ளியில் பயிலும் 11 லட்சம் மாணவர்களுக்கு “டேப்” வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இந்த வசதிக்கு பின் வருகைப்பதிவேடில் எந்தவித முறைகேடும் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அரசு பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டில் 4 வகையான வண்ண சீருடைகள் அறிமுகம் செய்யப்படுவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.