12 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை 12 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக வெளியான செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சென்னையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகளில் அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 7 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

மேலும் அரசு ஓமந்தூரார் மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தலா 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply