கொரோனாவின் கொடூரம்

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனாவில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் சென்னையை காலி செய்து விட்டு பிற மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த ஊரை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்

இந்த நிலையில் நேற்று தமிழகத்தில் 48 பேர் மரணமடைந்துள்ள நிலையில் சென்னையிலும் பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன்னர் வெளியான தகவலின்படி சென்னையில் கடந்த 12 மணி நேரத்தில் மட்டும் 18 பேர் பலியாகி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 9 பேரும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 9 பேரும் என மொத்தம் 18 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது

Leave a Reply