சென்னையில் வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம்: திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை காலம் முடிந்தும் விடுதலை செய்யப்படாமல் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக் கோரி இன்று கவர்னர் மாளிகை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தி வரும் வைகோவுக்கு திமுக உள்ளிட்ட தோழமை கட்சிகள் ஆதரவு கொடுத்து வருகின்றன.
இன்று காலை சைதாப்பேட்டை சின்னமலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய வைகோ, 7 பேர்களை விடுதலை செய்ய கவர்னர் மறுத்து வருவது அரசியல் சாசன சட்டத்துக்கு விரோதமானது. கண்டிக்கத்தக்கது. உடனே அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றார்.
இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., மாவட்டச் செயலாளர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, நிர்வாகிகள் சைதை குணசேகரன், பாலவாக்கம் விசுவ நாதன், சோமு, மணி மாறன், ஏ.எம்.வி. பிரபாகர் ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.