சென்னையில் விடிய விடிய மழை! பள்ளிகளுக்கு விடுமுறையா?

வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கியுள்ள நிலையில் இன்றைய முதல் நாளே சென்னையில் விடிய விடிய மழை வெளுத்து வாங்குகிறது

குறிப்பாக சென்னை கிண்டி, தரமணி, சைதாப்பேட்டை, பட்டினப்பாக்கம், எழும்பூர், திருவல்லிக்கேணி, மெரினா, விமானநிலையம், புரசைவாக்கம், வியாசர்பாடி, தேனாம்பேட்டை, அண்ணாநகர், நெற்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது

நேற்று இரவில் இருந்தும் இன்று அதிகாலையிலும் தொடர்ந்து கனமழை சென்னையில் பெய்து வருவதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளது. இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் இருந்து விரைவில் தகவல் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply