சென்னையில் வழக்கம்போல் பள்ளிகள், கல்லூரிகள் இயங்குமா? முக்கிய அறிவிப்பு!

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அறிவித்துள்ள நிலையில் சென்னையில் நேற்றிரவு முதல் இன்று காலையிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வருமா? என பொதுமக்கள் ஆர்வத்துடன் செய்தி சேனல்களை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் வழக்கம்போல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என்பது உறுதியாகியுள்ளது

Leave a Reply