சென்னையில் மீண்டும் சாலையில் 10 அடி பள்ளம்: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

சென்னையில் உள்ள சாலைகளில் அவ்வப்போது திடீர் திடீரென பள்ளங்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகளை பயன்படுத்தி வருவது தெரிந்ததே

சென்னை அண்ணா சாலை மற்றும் சென்னை மத்திய கைலாஷ் அருகே உள்ள பகுதிகள் உட்பட ஒரு சில பகுதிகளில் திடீர் திடீரென தீ பள்ளங்கள் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே பயணம் செய்து வருகின்றனர்

இந்த நிலையில் இன்று சென்னை ராயபுரம் அருகே ஒரு சாலையில் 10 அடியில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கழிவுநீர் வழித்தடத்தில்தான் இந்த பள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள இந்த சாலையில் பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வந்திருக்கின்றன
இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் உடனடியாக அந்த பள்ளத்தை சீர்செய்யும் பணியில் மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து செயல்படு வருகின்றனர் இந்த பள்ளம் மூடப்பட்டாலும் அடுத்து எங்கே பள்ளம் ஏற்படுமோ என்ற பயம் அனைவர் மனதிலும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply