கொரோனா வைரஸ் பாதிப்பு ஆரம்பித்த நாளிலிருந்தே சென்னையில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது
போராட்டம் ஆர்ப்பாட்டம் நடத்தினால் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வாய்ப்பு இல்லை என்பதாலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது
இந்த நிலையில் சென்னையில் போராட்டம் நடத்த மீண்டும் தடை விதித்து காவல்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்
செப்டம்பர் 26ம் தேதி நள்ளிரவு முதல் அக்டோபர் 1ம் தேதி வரை போராட்டம் நடத்த தடை என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அவர்கள் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்
மேலும் மனித சங்கிலி, ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்தவும் தடை விதித்து காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.