சென்னையில் புத்தக கண்காட்சி: ஜனவரி 4ல் முதல்வர் தொடங்கி வைக்கின்றார்.
சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தகத்திருவிழா நடைபெறுவது வழக்கமான ஒன்றே. அனைத்து பதிப்பகத்தார்களும் கடை போட்டு தங்கள் பதிப்புகளை விற்பனைக்கு வைத்திருப்பார்கள்
இந்த நிலையில் 2019ஆம் ஆண்டுக்கான 42வது புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி 4ம் தேதி தொடங்குகிறது; ஜனவரி 4ஆம் தேதி மாலை 6 மணிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்
இந்த புத்தக கண்காட்சி ஜனவரி 20 வரை 17 நாட்கள் நடக்கும் என்றும், புத்தக கண்காட்சிக்காக 820 அரங்குகள் அமைக்கப்படுவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.