சென்னையில் பள்ளிகள் இயங்கும்: மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதன் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு அவ்வப்போது விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது
இந்த நிலையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை தொடர்ச்சியாக தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருவதன் காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் கன்னியாகுமரி மற்றும் கோவை மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்
இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சற்று முன்னர் சென்னை மாவட்ட ஆட்சியர் இன்று வழக்கம் போல் சென்னையில் பள்ளிகள் இயங்கும் என அறிவித்துள்ளார்
இதனால் பள்ளி கல்லூரி மாணவர்களும் ஆசிரியர்களும் பள்ளி செல்ல தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.