சென்னையில் நள்ளிரவு விடிய விடிய கனமழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
சென்னையின் முக்கிய பகுதிகளான திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, எழும்பூர், புளியந்தோப்பு, கீழ்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது

அடையாறு, மந்தைவெளி,சேப்பாக்கம் உள்பட சென்னையில் பல்வேறு சுரங்கப்பாதையில் மழை நீர் தேக்கம் அடைந்துள்ளதால் பொதுமக்கள் சிரமத்தில் உள்ளனர்.

சென்னை தேனாம்பேட்டையில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

Leave a Reply