சென்னையில் தெர்மாகோல் தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து

சென்னை மதுரவாயல் அருகே சீமாத்தம்மன் கோயில் தெருவில் தெர்மாகோல் தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்தது. இந்த தொழிற்சாலையில் சற்றுமுன் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது

இந்த தீவிபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் மதுரவாயல், கோயம்பேடு, விருகம்பாக்கம் ஆகிய 3 தீயணைப்பு நிலையத்தில் இருந்து வந்த தீயணணப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் பெரும்புகை சூழ்ந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள முதியவர்கள், குழந்தைகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுளனர்.

Leave a Reply