ஏன் தெரியுமா?
சென்னையில் பொதுமுடக்க காலத்தில் 144 தடையை மீறியதாக இதுவரை 56,583 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
மாஸ்க், தனிமனித இடைவெளியை பின்பற்றாத 22,723 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னையில் பொதுமுடக்க உத்தரவை மீறி வெளியே சுற்றியவர்களின் 49,848 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது
கொரோனா வைரஸால் நொந்து நூலாகி இருக்கும் பொதுமக்கள் மீது மேலும் வழக்குகள் பதிவு செய்து அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டுமா? அறிவுரை கூறி அனுப்பி வைக்கலாமே என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் பொதுமக்களும் அரசின் அறிவுரைகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.