என்னென்ன நிபந்தனைகள்?

சென்னையில் வரும் 18 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்றும், காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் பெரிய மால்கள், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் டாஸ்மாக் திறக்கப்படாது என அறிவித்துள்ள தமிழக அரசு நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் எனவும் அறிவிப்பு செய்துள்ளது.

மேலும் டாஸ்மாக் கடைகளுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்கள் முகக் கவசம் அணிவது, தனிமனித இடைவெளி பின்பற்றுவது கட்டாயம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது

Leave a Reply