shadow
சென்னையில் செய்தியாளர்களை சந்திக்கின்றார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி இன்று சென்னையை அடுத்த மகாபலிபுரம் அருகே உள்ள திருவிடந்தை என்ற பகுதியில் பாதுகாப்பு தளவாடங்கள் கண்காட்சியை பார்வையிட வருகை தருகிறார்.  
இன்று தொடங்கி 4 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் இந்தியாவில் தயாரான நவீன ரக பீரங்கிகள், டாங்குகள், நவீன ராடார்கள், போர் விமானங்கள், நீர்மூழ்கி கப்பல்களின் மாதிரிகள் ஆகியவையும் இடம் பெற்றுள்ளது.
இந்த கண்காட்சியை பார்வையிட்ட பின்னர் பிரதமர் மோடி கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி வளாகத்தில் செய்தியாளர்களை சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது காவிரி பிரச்சனையில் மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் உள்ளிட்ட கேள்விகளுக்கு அவர் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Leave a Reply