shadow

சென்னையில் சசிகலா? எடப்பாடி பழனிச்சாமியை சந்திப்பாரா?

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா, நேற்று இரவு பரோலில் வெளிவந்து சென்னை வந்தடைந்தார். அவர் சென்னை தி.நகரில் உள்ள இளவரசி மகள் வீட்டில் தங்கியிருக்கும் நிலையில் இன்று காலை அவர் நடராஜன் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு சென்று சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சசிகலாவால் முதல்வர் பதவியை பெற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஏழு மாதங்களில் ஒருநாள் கூட பெங்களூர் சென்று சசிகலாவை சந்திக்கவில்லை. அதுமட்டுமின்றி சசிகலா குடும்பத்தினர்களை கட்சியும் ஆட்சியும் ஒதுக்கி வைத்துவிட்டதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் சசிகலா சென்னைக்கு வந்துள்ள நிலையில் அவரை முதல்வர் சந்திப்பாரா? என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது. சசிகலாவுக்கு விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனையின்படி அவர் யார் வீட்டுக்கும் சென்று அரசியல் தலைவர்களை சந்திக்க கூடாது. ஆனால் அவரது வீட்டிற்கு வரும் அரசியல் தலைவர்களை சந்திக்கலாம். எனவே இன்னும் நான்கு நாட்களில் யார் யார் சசிகலாவை சந்திக்க செல்லவிருக்கின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply